Tuesday, November 10, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 14

காலை இதோ விடிந்துவிட்டது. எனது கேள்விகளும் எழுந்துவிட்டது எனக்குள் மீண்டும். கலையாத தூக்கத்தோடு படி இறங்கி ஹாலில் டிவி முன் அமர்ந்தேன். கீதாவும் அப்போதுதான் வந்து எனது அருகில் வந்து சன் மியூசிக் வைத்தாள்.

"என்னங்கடி காலையில் டிவி முன்னாடி? இப்படி இருந்தீங்க அப்படினா எப்படி  வீட்டுல எப்படி குப்பை கொட்ட முடியும்?" என்றார் அம்மா.

இந்த வார்த்தை என்னது சந்தேகத்தையும் கோபத்தையும் அதிகமாகியது. சற்றென்று நான் சமையலறை சென்று பாத்திரம் விலக்க ஆரம்பித்தேன். கீதாவும் என்னுடன் சேர்த்து வேலை ஆரம்பித்தாள். அப்போது என்னை அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டது.

"அபி, என்ன ஒரு மாதிரி இருக்க?"

"அது எல்லாம் ஒன்னும் இல்லைமா" பொய் சொன்னேன் நான். 

"இல்லை.. நேத்துல இருந்து எதோ வித்தியாசம் தெரியுது. மறைக்காம  சொல்லுடி" என்றார் அம்மா.

நான் என் மனதில் இருந்ததை சொல்லி முடித்தேன். அம்மாவும் தங்கையும் அமைதியாக கேட்டனர். பின்பு அம்மா பேசத் தொடங்கினார்.

"அபி, நம்ம எல்லோருக்குமே தெரியும் நீ இதை உன் நண்பி பூர்ணிமாக்காக செய்யுற. நீ என் ஒரே பையன். நீ ஒரு பொண்ணுமாதிரி இருக்குறது எனக்கு முதல சம்மதம் இல்லாட்டியும் நான் உன் ஆசைக்காக ஒத்துகிட்டேன். உன் ஆசையும் சந்தோசமும் தான் எனக்கு முக்கியம்.

நீ 4 வருஷம் ஒரு பெண் மாதிரி இந்த உலகத்துல நடிக்க போகிறாய். இல்லையா? அப்படி இருக்கும் பொது கரெக்டா இருந்தாதான் யாருக்கும் சந்தேகம் வராது. உனக்காகத்தான் நானும் பூரணி அம்மாவும் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்குறோம். பூரணி அம்மா இந்த ஊரு கலெக்டர் என்பதால் நமக்கு கொஞ்சம் ஈசி.

நீ ஒரு உண்மையான பொண்ணு மாதிரி நடந்துகிட்டா தான் யாருக்கும் சந்தேகம் வராது. அதுக்கு உன்னை நீ ஒரு பெண்ணாக முதல ஏத்துக்கணும். அப்போ தான் மத்தவங்களை நம்ப வைக்க முடியும்.

ஆனா உனக்குள்ள இப்படி ஒரு குழப்பம் இருந்த மறுபடி யோசி. தப்பு இல்ல. நீ எந்த முடிவுக்கு வந்தாலும் நாங்க உனக்கு துணையாய் இருப்போம்." பேசி முடித்தார் அம்மா.

இப்போது என் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

"இன்னும் வெறும் 4 வருஷம் தான் நான் அபிராமி மாதிரி இருப்பேன். அப்புறம் நான் பழையமாதிரி ஒரு பையன் மாதிரி வாழ்க்கை வாழ்வேன். இப்போ இந்த 4 வருஷம் மட்டும் இந்த உலகத்துக்கு நான் பொண்ணு மாதிரி இருக்க போறேன். இனி எனக்கு எந்த குழப்பமும் இல்லை" தெளிவாய் சொன்னேன் அம்மாவிடமும் கீதாவிடமும்.

கீதா சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடித்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அக்கா. எனக்கு என் அக்காவைத் தான் ரொம்ப புடிச்சி இருக்கு. வாழ்க்கை முழுக்க இப்படி  இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்."

கொஞ்சம் சிரித்து விட்டு அவளை கட்டிப்பிடுத்து நன்றி சொன்னேன்.

மேலும் அம்மா தொடர்ந்து பேசினார். 

"அபிராமி , நான் ஒண்ணு சொல்றேன். இது கீதாவுக்கு தெரியும், புரியும். நீயும் புரிஞ்சிக்கணும். ஒரு பொம்பளையா இருப்பது அவ்ளோ சுலபம் இல்லை. வெளியில் ஆண்கள் நம்மை ஒரு போதை பொருள் மாதிரித்தான் பாப்பாங்க. நேத்து நீ ஒரு பையன் உன்னை பாத்ததுக்காக அழுத என்று கீதா சொன்னாள். அவன் உன்னை ஒரு பொண்ணுமாதிரி பாத்தான். சோ அதுல தப்பு இல்லை. நம்மதான் ஜாக்கிரதையாய் இருக்கனும்.

பொண்ணுங்க ஈசியா ஒரு பையன் கிட்ட விழுந்துடுவாங்க. பாத்து நடந்துக்கோ." அறிவுரை முடித்தார் அம்மா. அப்புறம் வேலை எல்லாம் முடித்து நாங்கள் மூவரும் பாலிமர் டிவியில் ஹிந்தி சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம். அப்போது பூர்ணிமாவும் அவளது அம்மாவும் எங்கள் வீட்டுக்குள்ளே வந்தனர். ஏனோ பூரணி பள்ளி சீருடை அணிந்திருந்தாள்.

"வாங்க ஆண்டி. வாடி பூரணி" இருவரையும் அழைத்து அமரச் செய்தேன். அம்மா என்னிடம் காப்பி போட்டு கொண்டு வரச் சொன்னார்கள். எங்கள் வீட்டு வேலைக்காரி செல்வி அக்கா விடுப்பில் சென்றதால் என்னிடம் சொன்னார்கள். ஆண்டி கீதாவிடம் அவளது விளையாட்டு போட்டி பற்றி பேசிக்கொண்டு இருந்ததால் அவள் வரவில்லை.

நான் சமையல் அறையில் காப்பி போட்டுக்கொண்டு இருக்கும் பொது பூரணி வந்தாள்.

"என்னடி, நல்லா காப்பி போட கத்துகிட்டியா? ஒழுங்கா கத்துக்கோ. பின்னாடி உன் புருஷனுக்கு நீ தான் டெய்லி காப்பி போட்டு காலைல எழுப்பனும்" என்று கிண்டல் அடித்தாள்.

"சீ..சும்மா இருடி."

"அய்யோ.. இங்க பாரேன் இவ வெட்கப் படுறத.. என் கண்ணே பட்டிடும் போல."

"ஏன் என்னை ரொம்ப கிண்டல் பண்ணுற பூரணி?"

"இல்லடி, வெட்கப்படும்போது நீ ரொம்ப அழகா இருக்க. இவ்ளோ வருஷமா உனக்குள்ள ஒளிஞ்சி கிட்டு இருந்த பெண்மை அழகா வெளிய வருதுடி."

எனக்கு வெட்கமும் பொங்கியது. அடுப்பில் பாலும் தான். காப்பி போட்டு ஒரு தட்டில் 5 கப்பில் ஒற்றி எடுத்து வந்தேன்.

"ஓ, உங்க பொண்ணு அபிராமி இப்போ ரொம்ப முன்னேறி விட்டாபோல. குட் குட். சரி, எனக்கு உங்க 2 பொண்ணுங்க போட்டோ வேணும். காலேஜ்ல கேட்டாங்க. ஸ்கூல் யூனிபார்ம் போட்ட மாதிரி தான் வேணுமாம். இவகிட்டையும் புது போட்டோ இல்லை. ஸோ இவங்க மூணு பேரும் ஸ்டுடியோ போய் புது போட்டோ எடுத்துட்டு வரட்டும்" என்றார் ஆண்டி.

"இவளுக்குன்னு யூனிபார்ம் இல்லை. கீதாவோட யூனிபார்ம்தான் இவ போடணும். சைஸ் கரெக்ட் இருக்கும். சோ ப்ரொப்லெம் இல்லை." அம்மா சொன்னார்.

"நல்லது.. அபிராமி இன்னுமா தலைக்கு விக் யூஸ் பண்ணுற? சீக்கிரம் உண்மையான கூந்தல் வளர்க்கணும். அப்போதான் இயல்பா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா இப்படி வெறும் நைட்டி போட்டுக்கிட்டு நிக்க கூடாது. மேல டவல் எதாவது போட்டுக்கணும். நாங்க இருக்கும்போது இப்போ ஓகே. நான் பொதுவா சொல்றேன்."

"சரிங்க ஆண்டி. இனிமேல் பாத்துக்குறேன். எனக்கும் ரொம்ப ஆசைதான் கீதா மாதிரி நீளமான முடி வேணும்னு"

"ஹ்ம்ம்ம், இது பெண்களோட இயல்பான ஆசை..உனக்கும் ஒட்டிகிச்சா இந்த கொஞ்ச நாளைல" சிரித்தார்கள் அனைவரும்.

இப்போது கீதாவும் பூரணியும் என் அறைக்கு ஒரு பள்ளி சீருடை எடுத்துக்கொண்டு வந்தனர். என்னை அதை அணியச்சொல்லி விட்டு இருவரும் என் எதிரே அமர்ந்தனர்.

நான் அப்போது அணிந்திருந்த நைட்டி மற்றும் உள்பாவாடை கழட்டி விட்டு என் பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்து நின்றுகொண்டு இருந்தேன்.

"இங்க பாத்தியா கீதா உன் அக்காவை, எதோ பிரா கம்பெனிக்கு விளம்பரம் பண்ணுறமாதிரி நிக்குறா..."

"என்ன இப்போ. என் அக்காவுக்கு என்ன குறைச்சல்." இது கீதாவின் குரல்.

நான் இதை எல்லாம் கண்டுகொள்ளாத மாதிரி சீருடை சட்டை அணிய ஆரம்பித்தேன். அப்போது பூரணி என்னை நிறுத்தச் சொன்னாள்.

"இந்த டிரஸ்க்கு இந்த பிரா எல்லாம் போடகூடாது. எல்லா பிரா எல்லா டிரஸ்க்குக்கும் போடா முடியாது. போட்டாலும் சரி இருக்காது. இந்த மாதிரி டிரஸ்க்கு சீம்லெஸ் பிரா தான் போடணும். அப்போதான் நல்லா இருக்கும். உனக்கும் நல்ல பிட்டிங் கிடைக்கும். இல்லாட்டி ட்ரெஸ்  கொஞ்சம் வித்தியாசமா தெரியும்."

கீதா அவள் அறையில் இருந்து ஒரு பிங்க் பிரா எடுத்துக் கொடுத்தாள். அதை அணிந்தபின் நான் சீருடை அணிந்து தயாரானேன். நாங்கள் மூவரும் தயார். நாங்கள் ஸ்டுடியோவில் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டு, கீதாவின் ஆசைக்காக மூவரும் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று கீதா விஸ்பர் சானிடரி நாப்கின் ஒன்று வாங்கினாள்.

"ஹே கீதா, இப்போ எதுக்கு இதை வாங்குற? அதான் ஒரு பாக்கெட் வீட்டுல இருக்குல?"

"இது எனக்கு இல்லடி. உனக்கு. நேத்து நீதான உனக்கும் இது வேணும்னு கேட்ட. எனக்கும் அது சரினு தோணிச்சு. ஒரு பொண்ணுனா இது எல்லாம் பழகனும்." என்றாள் கீதா.

"ஆமா அபி.. இதுல்லாம் உன் காலேஜ் பைல இருந்தாதான் உன்னை ஒரு பொண்ணுன்னு இயல்பா நினைப்பாங்க. அப்புறம் பீரியட்ஸ்னு சொல்லி லீவ் கூட எடுக்கலாம்" சிரித்தாள் பூர்ணிமா.

வீட்டுற்கு வந்தபின் சீக்கிரம் ஓடியது. அம்மா வேளைக்கு சென்றதால் நாங்கள் மூவர் மட்டும் இருந்து விஷயங்கள் பல பேசினோம். இறுதியில் பொழுது சாந்தது. அதோடு என் உடம்பில் நைட்டியும் ஏறியது.

Sunday, November 8, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 13

இரவில் நடு தூக்கத்தில் எழுந்தேன். அதற்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. நாளை வெளியில் செல்லும்போது என் கூந்தல் அழகை மாற்ற வேண்டும். நேற்று படித்த மங்கையர் மலர் புத்தகத்தில் இருந்த சில டிசைன் மாதிரி எனக்கு கூந்தல் முடி வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். காலையில் அம்மாவிடமும் , கீதாவிடமும் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு பலவற்றை யோசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தது.

காலையில் பல் விலக்கிவிட்டு கீழே வந்தேன். இப்போதெல்லாம் நான் இரவில் நைட்டி தான் அணிகிறேன். நானும் கீதாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது டிவியில் விஸ்பர் பேட் விளம்பரம் வந்தது.

"கீதா, நான் இப்போ ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ணுறேன். இது மட்டும் ஏன் இல்லை?"

"இதுவா? விஸ்பர் பேட் பத்தி சொல்றியா?"

"ஆமா"

"சரி  சரி, நான்  உனக்கு இன்னக்கி நைட் எடுத்து தரேன்."

"ஓகே டி. நான் சொல்ல மறந்துட்டேன். எனக்கு நேத்து கனவு வந்ததுடி. உனக்கு கல்யாணம் நடக்குற மாதிரி."

"நல்ல விஷயம், தான்", என்று  குறும்பாய் சிரித்தாள். "அப்புறம் சொல்லு.."

"அதுமட்டும் இல்லை கீதா. அம்மா நேத்து சொன்ன மாதிரி எனக்கும் உனக்கும் ஒரே டைம், ஒரே மாப்பிள்ளை. நம்ம ரெண்டு பேருக்கும் தாலி கட்டறமாதிரி கனவுடி." என்று எனக்கு தூக்கம் போனதைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"என்னங்கடி, எதோ கல்யாணம், தாலி என்று காதுல விழுது. என்ன விஷயம்?" என்று அம்மாவின் குரல் கேட்டது. அப்போது அம்மா எங்களுக்காக கையில் தேநீர் எடுத்துக் கொண்டுவந்தார்.

கீதா என் கனவு பற்றி அம்மாவிடம் சொன்னாள்.

"நான் உங்க  ரெண்டு பெயரையும் ரொம்ப சின்னப் போன்னுங்கனு நினைச்சேன். இப்போ தான் புரியுது, நீங்க வயசுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு. என் தப்புப்தான்." என்றார் அம்மா. பின்பு அவரே தொடந்தார்.

"கீதா, நீ யாராவது பையனை லவ் கிவ் பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லமா."

"நீ, அபிராமி? யாராவது பையன் உன்  மனசுல இருக்கானா டி?"

"அய்யோயோ.. அது எல்லாம் இல்லை. உங்களுக்கே தெரியும், நான் இப்போ  பொண்ணுங்க மாதிரி டிரஸ் மட்டும்தான் பண்ணிக்கிறேன்."

"ஹ்ம்ம்.. எனக்கு நீயும் என் பொண்ணுதான். அதான் அவளை கேட்டமாதிரி உன்னையும் என்னை அறியாமல் கேட்டுட்டேன். சரி. நீங்க காதலிக்கிறது எனக்கு ப்ரோப்ளம் இல்ல. பட் எல்லை மீறக்கூடாது. படிப்பு முக்கியம்". அம்மா அக்கறையுடன் சொன்னார்.

நாங்கள் முன்பே முடிவு செய்தது போல நான், கீதா மற்றும் பூர்ணிமா, மூவரும் ஷாப்பிங் போக கிளம்பிவிட்டோம். அம்மா எங்களை பார்த்து செலவு செய்யச் சொன்னார்கள். ஆடைகள் பல ஏற்கனவே நிறைய வாங்கிவிட்டதால் இந்த முறை மற்றவைக்கு செலவு செய்யச் சொல்லி அனுப்பினார்.

அம்மா அனுமதியுடன் இன்று ஒரு பெண்ணாக வெளியில் போகபோகிறேன்.   அதனால் கீதாவையும் பூர்ணிமாவையும் எனக்கு உதவும்படி சொன்னார். நான் முன்பு ஒருமுறை வெளியில் சென்றது தெரியாது.

நானும் கீதாவும் எனக்கு எந்த டிரஸ் போட என்று பேசிக்கொண்டிருந்தபோது, பூரணி ஒரு யோசனை சொன்னாள். 

பூர்ணிமாவின்  மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவள் அணிந்த பாவாடை தாவணியை அவள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்தாள். மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆடை அது. அவள் யோசனையும் அந்த பாவாடை தாவணியும் எனக்கு பிடித்தால் நான் சம்மதித்தேன்.

நான் ஒரு சிகப்பு பிரா மட்டும் பேன்ட்டி அணிந்து, என் அறைக்குள் அவர்கள்  இருவரையும் அழைத்தேன். இப்பொது எனக்கு இப்படி மற்ற பெண்கள் முன் இப்படி இருக்க பழக்கம் ஆகிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. 

"பரவா இல்லை, நீயே சொந்தமா பிரா போட பழகிட்ட. ஹ்ம்ம்" என்றாள் கீதா.

என்னை ஒருமுறை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, ஒரு பக்கம் திரும்பி இருந்த என் பிரா ஸ்ட்ராப் அட்ஜஸ்ட் செய்துவிட்டாள் பூரணி. ஏற்கனவே பிராவினுள் ஸ்லிப்ஸ் வைத்து இருந்ததால், ப்ளௌஸ் அணிந்த பின், என் மார்பகம் ஒரு அழகு தந்தது. இருவர் உதவியுடன் ஆடை அணிந்து தயாரானேன். பூரணி ஏற்கனவே தயாராகி இருந்ததால் கீதா மட்டும் கிளம்ப வேண்டும் இனி.

இதோ நாங்கள் இப்போது தயார். இந்த முறை மூவரும் மாநகர பேருந்தில் செல்வதாக உத்தேசம். மகளிர் பேருந்து எதுவும் இல்லாததால் கூடம் இல்லாத ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறினோம். நான்  யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளை.
 
எனக்கு பிடித்த சில கூந்தல் விக் வாங்கி விட்டு, அருகில் இருந்த மல்டிப்ளெக்ஸ் கடைக்கு சென்றோம். கீதா சில விளையாட்டு போட்டிக்கு வெளி ஊர் செல்வதால், சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.

பின்னர் ஐஸ் கிரீம் சாப்பிட சென்றோம். நான் மெய் மறந்து ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொது பூரணி என் காலை உதைத்தால் மேஜையின் கீழ். எனக்கு காரணம் புரியாததால் நான் அதை கண்டு கொள்ள வில்லை. என் அருகில் இருந்த கீதா என் காதருகில் வந்து விஷயத்தை சொன்னாள். பின்பு அவளே என் தாவணி சரி செய்து விட்டாள். ப்ளௌஸ் விட்டு வெளியே வந்த பிரா ஸ்ட்ராப் நானே சரி செய்து கொண்டேன்.

என் தாவணி விலகி போயிருந்ததால், என் மார்பகம் சிறிது தெரிந்து இருக்கிறது போலும். எனக்கு அருகில் இருந்த ஒரு ஆண் என்னை கண்ணால் விழுங்கி கொண்டிருந்தான். என் பிரா ஸ்ட்ராப் வேறு அவன் கண்ணை உறுத்தி இருக்கும். இதை நினைக்கும் பொது என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. என்னை அறியாமல் அழத்துடங்கி விட்டேன்.

காரணம் புரியாமல் கீதா , பூர்ணிமா இருவரும் திகைத்தனர். என்னை பெண்கள் கழிவறைக்கு அழைத்து சென்று காரணம் கேட்டனர். நான் காரணம் சொன்னபோது இருவரும் சிரித்து விட்டனர்.

"ஐயோ அபி, இது எல்லாம் பொண்ணுங்க வாழ்க்கைல சாதாரணம். இதுக் எல்லாமா அழுவாங்க? நம்ப தான் உசாரா இருக்கனும் டி." என்றாள் பூரணி.

கீதா என் கண்ணை துடைத்து விட்டு மேக்கப் சரிசெய்து விட்டாள். இருந்தும் நான் ஒரு மாதிரி தான் இருந்தேன். என்னை சந்தோஷ படுத்த, இருவரும் என்னை காலணிகள் கடைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்றவுடன், என்னை அரியம் எனது பெண்ணுணர்வு வெளி வந்தது. எனக்குள் ஒரு சந்தேகம். நான் ஏன் இப்படி ஒரு நிஜமான பெண்ணை மாதிரி சந்தோசப் படுகிறேன்? நிஜத்தில் நான் ஒரு ஆண் தானே.. இப்படி பல குழப்பம் என் மனதில்.

இறுதியில் எனக்கு  ஒரு ஹை ஹீல்ஸ் வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.

எனக்குள் இருந்த அந்த குழப்பம் மீண்டும் வந்தது.

நான் ஒரு ஆண்  அல்லது ஒரு பெண் ? நான் நிஜமாக ஒரு பெண்போல் ஏன் நடந்து கொள்கிறேன்? என் வாழ்கை என்னவாகும் கல்லூரிக்குப் பின்?

தூக்கம் வரவில்லை, என் எதிர்காலத்தை நினைத்து. மனது சோகமானது. அப்போது என் கண்ணில் பட்டது புதியாய் வாங்கிய ஹை ஹீல்ஸ்.

இதோ மீண்டும் மனதில் சந்தோசம் அதை போட்டு கொஞ்சம் தூரம் என்  அறையில் நடந்து பழகிய போது.

Thursday, March 12, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 12

இதோ பள்ளித்தேர்வுகள் முடிந்திவிட்டது இன்றோடு. தேர்வு முடிந்து, நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் பள்ளியில்  இருந்தேன். மாலை நானும் கீதாவும் ஒன்றாக வீடு வந்தவுடன் நான் என் அறைக்குச் சென்று உள்ளாடை மற்றும் நைட்டி அணிந்து கொண்டேன்.கீதாவும் நைட்டி அணிந்து கொண்டாள்.

"அபி, இனிமேல் நமக்கு எந்த கவலையும் இல்லை. எக்ஸாம் முடிஞ்சது" கீதா ஆனந்தமாய் சிரித்தாள்.

"ஆமா  டி .. இனிமேல் எதுவும் படிக்கத் தேவை இல்லை. நிம்மதியா வெளிய போகலாம்."

"ஆமாம். அதான் எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நீ ஒரு பொண்ணு மாதிரி வெளிய போகலாம்னு அம்மா ஏற்கனவே சொன்னாங்க. நாளைக்கு நம்ம வெளிய போகலாம்."

நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்கள். அவர் கையில் சில புத்தகங்கள் இருந்தது. அவைகளை மேஜை மீது வைத்தவுடன் நானும் கீதாவும் அதைப் பார்த்தோம். அவைகள் பெண்களுக்கான மாத மற்றும் வார இதழ்கள்.

"உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சது. டெய்லி உங்களுக்கு போர் அடிக்குமே என்று இந்த புக்ஸ் வாங்கினேன்." என்றார் அம்மா.

கீதா ஒரு ஆங்கில இதழ் ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு "மங்கையர் மலர்" எடுத்துக் கொடுத்து படிக்கச் சொன்னாள். முன்பு அம்மாவும் கீதாவும் "அவள் விகடன்" படிக்கப் பார்த்திருக்கிறேன் என்பதால் "அவள் விகடன்" இதழையும் எடுத்துக்கொண்டேன்.

இரவு உணவு சாப்பிடும் பொது அம்மாவிடம் நாளை வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினோம். அம்மா எங்களை  பத்திரமாக சென்று வரவேண்டும் என்றார். அம்மாவுக்குத் தெரியாது நாங்கள் ஏற்க்கனவே வெளியில் சென்றது. சாப்பிட்டபின் கீதா அவள் அறைக்கு சென்றுவிட்டாள். அம்மா என்னை பாத்திரம் கழுவ கூப்பிட்டார்.

சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அம்மா பேச்சு கொடுத்தார்.

"ஏண்டி அபிராமி, இனிமேல் உனக்கு லீவ் தான. என்ன செய்யப் போற?"

"தெரியல.. போர் அடிக்கும் எனக்கு வீட்டுல இருக்க."

"ஆமா, கீதாவும் விளையாட்டு போட்டிக்கு வெளியூர் போயிடுவா. நீ மட்டும் தனிமையில் இருப்ப."

"ஹ்ம்ம்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்க மா?"

"சரி, நான் யோசிச்சி சொல்றேன்" என்று அம்மா சொன்னபோது கீதாவின் குரல் கேட்டது.

"அம்மா, அக்காவுக்கு போர் அடிக்கும் என்றால் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிவைங்க" என்று சொல்லி கையில் துவைக்க வேண்டிய துணிகளை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வந்தாள்.

"பாருங்க அம்மா, அவ என்னை கிண்டல் பண்ணுறா. முதல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்று கோபித்துக்கொண்டேன்.

எங்கள் சண்டையை பார்த்து அம்மா சிரித்துக்கொண்டு இருந்தார்.

"நிறுத்துங்கடி உங்க சண்டையை.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தான் கல்யாணம். இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்க ரெண்டு பெரும் ஒரே ஆணுக்குத்தான் கழுத்தை நீட்டனும். அப்போ தான் நீங்க இப்படி சண்டை போடாம உங்க புருஷனை ஒழுங்கா கவனிப்பிங்க." என்று சொல்லி சிரித்தார்.

இதைக் கேட்டதும் எனக்கும் கீதாவும் வெட்கமாய் வந்ததால் நாங்கள் இருவரும் எங்கள் அறைக்கு ஓடிவிட்டோம். பின்பு எனது கட்டிலில் படுத்துக்கொண்டு "மங்கையர் மலர்" படிக்க ஆரம்பித்தேன். இதோ, அப்படியாய் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

Sunday, January 18, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 11

இன்னும் பாதி நாள் இருக்கு நான் இந்த சேலையில் இருக்க. இன்று காலை நடந்த நிகழ்ச்சியால் நான் சந்தோசமாக இருக்கிறேன். மாலையில் பூர்ணிமா அவள் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தாள். எனக்கு அவள் அம்மா ஒரு  நீள புடவையும், ஜாக்கெட் பிட்டும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.

அம்மா செல்வி அக்காவிடம் சொல்லி அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டுவர சொன்னார். சமையல் அறையில் இருந்த செல்வி அக்காவிடம் சென்று சொன்னேன்.

"அபிராமி, என் கூட இரு. நான் உனக்கு தேநீர் போட சொல்லித்தரேன்" என்று செயல் முறைகளை சொல்லிக் கொடுத்தார். பின்பு என்னை கொண்டு போய் கொடுக்கச் சொன்னார். அம்மா சொல்லி இருக்கிறார் போல் எனக்கு இந்த மாதிரி வேலைகளை எனக்கு சொல்லித் தரவேண்டும் என்று.


நான் தேநீர் தட்டை கொண்டு வரும்போது என் கையின் அடியில் வேர்வை இருந்து உருத்தியத்தை உணர்ந்தேன். என் ஜாக்கெட் வேர்வையில் நனைந்து இருந்தது தெரிந்தது. இருந்தாலும் புடவை மாற்றும் எண்ணம் இல்லை.

எங்கள் இருவர் அம்மாவும் எங்களை கல்லூரியில் சேர்க்கும் வழிகளைப் பற்றி பேசி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் அந்த வேலைகளை பாத்துக் கொள்வதாக சொன்னதால் நான் நிம்மதி அடைந்தேன். இன்று நீண்ட நெடிய நாளாய் இருந்ததால் நான் புடவையோடு படுத்து விட்டேன்.

இதோ இன்னொரு நாள் விடிந்து விட்டது. இன்னும் பொதுத் தேர்வுக்கு 2 வாரம் தான் இருக்கு. நான், பூர்ணிமா மற்றும் கீதா மூவரும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். அம்மாவேறு வீட்டில் இல்லை. எனக்கு திடீர் என்று ஒரு ஆசை வந்தது.

"எனக்கு இன்னக்கி ஒரு பொண்ணு மாதிரி வெளிய போயிட்டு வரணும்னு ஆசை.. பரிட்சைக்கு முன்னாடி ஒரே ஒரு முறை சென்று வந்தால் எனக்கு நிம்மதியா இருக்கும்."

"வேண்டாம்டி அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. என்றாள் கீதா.

"அதுக்குள்ள என்ன அவசரம். பரீட்சை முடியட்டும்" என்றாள் பூர்ணிமா.

"நான் தான் நேற்றே வயசுக்கு வந்து விட்டேன்ல.. அப்புறம் என்ன?" என்று கிண்டலாய் கேட்டேன். ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்தேன். ஒரு வண்டி மட்டுமே வீட்டில் இருந்ததால் நானும் பூர்ணிமாவும்  செல்லலாம் என்று முடிவு எடுத்தோம். பூர்ணிமா நீல டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாதால் நானும் அதே மாதிரி அணியலாம் என்று எண்ணினேன்.

இறுதியாக நான் டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்து வெளியே வந்தபோது கீதாவும் பூரணியும் ஆச்சரியப்பட்டனர்.



 "ஒய் அபிராமி, செமையா இருக்கடி இந்த டி-ஷர்ட்ல" என்றாள் பூர்ணிமா. கீதாவும் ஆம் என்றாள்.

"நான் புஷ்-அப் பிரா மற்றும் பிரா பேட் யூஸ் பண்றேன் இப்போ" என்றேன்.

"அது மட்டும் இல்லாம டைட்டா டி-ஷர்ட் போட்டிருக்க இல்லையா?" கேட்டாள் கீதா. நான் ஆம் என்றேன்.

"என்னடி கீதா, இவ நம்மளைவிட ஸ்பீடா இருக்கா. விட்டா இன்னைக்கே புது பாய் பிரெண்ட் புடிச்சிடுவா போல" - பூர்ணிமா.

"சீ போங்கடி. எனக்கு அது எல்லாம் புடிக்காது"

"பாக்கலாம்.. பாக்கலாம்" என்று பூர்ணிமா வெருப்பேற்றினாள்.

இதோ, நானும் பூரணியும் ஸ்கூட்டியில் போய் கொண்டிருக்கிறோம். பூர்ணிமா வண்டி ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது பின்னாடி சத்தம் கேட்டது. அது என்னவென்று வண்டியின் கண்ணாடி வழி பார்த்து விட்டாள் பூரணி.

"அபிராமி, சில பொறுக்கி பசங்க நம்மை பின் தொடர்ந்து வராங்க. நீ அமைதியா இரு"

"ஏன்?"

"பொண்ணுங்க ரோட்ல போனா அப்படித்தான் நடக்கும்"

"அது தெரியும் டி.. நான் ஏன் அமைதியா இருக்கணும்னு கேட்டேன்"

"லூசு.. நீ எதாவது பண்ணா அவுங்களுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிரும். அதான் சொல்றேன்" என்றபோது எனக்கும் அது சரி என்று பட்டது.

"மச்சி, சூப்பர் பிகருங்க டா" என்றான் ஒருவன்.

"வண்டி ஓட்டுற பொண்ணு சூப்பர் டா" என்றான் இன்னொருவன்.

"பின்னாடி இருக்குற குட்டிய பாருடா. நைட் முழுக்க அனுபவிக்கலாம்" என்று இது மாதிரி எங்கள் காதில் விழும்படி பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருவருக்கும் கோபம் வந்தாலும் அமைதியாக இருந்தோம்.

அப்போது தெருவில் இருந்த சில காவல் துறையினர் எங்களை மடக்கி லைசென்ஸ் கேட்டனர். எங்கள் பின்னால் வந்த அந்த ஆண்களையும் பிடித்தனர்.

மனதுக்குள் பயம் வந்து விட்டதால் நான் அமைதியாக இருந்தேன். பூர்ணிமா, அவள் அம்மா ஒரு கலெக்டர் என்று சொன்னதும் எங்களை விட்டுவிட்டனர். அந்த பசங்களையும் விட்டு விட்டனர் சில நோட்டுக்களை வாங்கிக் கொண்டு.

நாங்கள் கிளம்பும் போது, அந்த பையன் என்னை பின்னாடி தட்டி விட்டான். நான் அதிரிச்சி அடைந்தேன். பூர்ணிமா இதை கவனித்து காவலரிடம் சொன்னதும் அந்த இருவரையும் பிடித்து அழைத்துச் சென்றனர்.

பின்னால் நாங்கள் இருவரும் வீடு வந்து நடந்ததை கீதாவிடம் சொன்னேன்.

"அது என்னபா, உன்னை ஒரு நைட் முழுக்க வச்சி என்ன பன்னுவான் அவன்?" என்று கிண்டலடித்தாள் கீதா.

"ச்சீ போடி. சும்மா என்னை கிண்டல் பண்ணுறீங்க" என்று சிணுங்கினேன்.

இறுதியாக இன்று நடந்ததை அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன்.

Saturday, January 10, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 10

அன்று காலை ஏழுந்தவுடன் கீதா என்னை பாத்திரம் கழுவ அழைத்தாள். பாத்திரம் கழுவிக் கொண்டே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் நேற்று கடையில் என்னைப் பார்த்து சிரித்த காரணம் கேட்டேன். 

"இல்ல, நேத்து காலைல நீ என்னோட கிலிவேஐ்(cleavage) தெரியுது என்று சொன்ன... நியாபகம் இருக்கா உனக்கு?"

"ஆமாம் சொன்னேன். அதுக்கு என்ன இப்போ?"

"நேற்று நீ கடையில் அந்த பிங்க் பிரா போட்ட போது உனக்கும் கிலிவேஐ் தெரிந்தது. அந்த சிலிக்கான் பிரா பேட் வைத்தவுடன் இன்னும் அம்சமாய் இருந்தது. அதான் சிரிச்சேன்."

"நிஜமா நல்லா இருந்ததாடி? அப்படி காமிக்கலாமா? தப்பு இல்லை?"

"தப்பு என்று எதுவும் இல்லடி. எனக்கு அது புடிக்காது. அப்படி பப்ளிக்ல போகும் போது, எல்லா பசங்களும் பாப்பாங்க. அது ஒரு மாதிரி கூச்சமா இருக்கும்."

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மா அம்மா வந்து கீதாவை தனியாக கூப்பிட்டு ஏதோ சொல்லிவிட்டு சென்றார். பின்பு கீதா கையில் சிலவற்றைக் கொண்டு வந்தாள்.

"அம்மா உனக்கு இந்த கிரீம் எல்லாம் போட்டு விட சொன்னாங்க.  ஏன் என்று எல்லாம் என்னைக் கேக்காதடி. எனக்கு தெரியாது."

"என்ன கிரீம் இது?"

"உடம்பில் உள்ள முடியை எடுக்க. இது போட்டதுக்கு அப்புறம் உன்னோட ஸ்கின் ரொம்ப மென்மையா இருக்கும். சூப்பரா இருக்கும்."

"சரி, அம்மா சொன்னா ஒரு காரணம் இருக்கும். எனக்கு போட்டு விடு"

"அதுக்குள்ள ஆசைய பாரு. போய் டிரஸ் கழட்டிட்டு, பேன்ட்டி மட்டும் போட்டுக்கிட்டு வா" என்றாள். நானும் அவள் சொன்னது போலவே செய்தேன்.

பின்பு அவள் வீட்(veet) எனப்படும் அந்த கிரீம் எடுத்து என் கை மற்றும் கால்களில் தடவினாள். என் நெஞ்சினிலும் தடவினாள். ஏற்கனவே எனக்கு இயற்கையாகவே உடம்பில் முடி இல்லாவிட்டாலும், இந்த கிரீம் நல்ல ஒரு மென்மையை தரும் என்றாள் கீதா.

 சிறிது நேரம் கழித்து கை கால்களை துடைத்தவுடன் என் மேனி பளப்பளவென்று பட்டு போல் மென்மையாக இருந்தது. கீதா சென்று என் அம்மாவை கூட்டிகிட்டு வந்தாள்.

அம்மா அப்போது வந்து என்னிடம் ஒரு உள்பாவாடை கொடுத்து கட்டிக்கச் சொன்னார். ஒரு பெண் குளிக்கும் போது கட்டும் முறையில் கட்டுமாறு கீதாவை எனக்கு உதவச் சொன்னார். நான் கீதா உதவியுடன் கட்டிக் கொண்டதும் என்னை சரியாக 10:30 மணிக்கு பின் பக்கம் வரச் சொன்னார். அப்போது தான் நல்ல நேரம் ஆரம்பமாம். எனக்கு ஒரே குழப்பம். இன்று நடக்கும் அனைத்தும் எனக்கு வியப்பாக இருந்தது.

"என்ன நடக்குது கீதா? என்ன ஆச்சு அம்மாவுக்கு இன்னக்கி?" கீதாவிடம் கேட்டேன்.

"எனக்கு மட்டும் என்ன தெரியும். பொறுத்திருந்து பாக்கலாம்"

இன்னும் அம்மா சொன்ன நேரத்துக்கு இன்னும் அரை மணிநேரம் இருப்பதால் , நான் என் அறையில், அந்த உள்பாவாடை கட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். கீதா என்னுடன் இருந்தாள்.
இதோ மணி காலை 10:30 ஆகிவிட்டது.என்னை அழைத்து வரும்படி அம்மா கூப்பிட்டது எங்கள் காதில் விழுந்தது. நானும் கீதாவும் தோட்டத்துப் பக்கம் சென்றோம்.

அங்க அம்மாவுடன் எங்கள் வீட்டு வேலைகாரி செல்வி, பூர்ணிமா  மற்றும் அவளின் அம்மா இருந்தனர். சற்றுத் தள்ளி வேலைக்காரியின் மகள் சாந்தி என்னைப் போலவே உடம்பை மறைக்குமாறு உள்பாவாடை கட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். என்னனயும் அவள் அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமரச் சொன்னார் பூர்ணிமாவின் அம்மா. எனக்கு ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தேன்.

அம்மா அப்போதுதான் விளக்கமாய் சொன்னார்.  வேலைக்காரி எங்கள் வீட்டில் ஒரு அங்கம்தான். பல வீட்டில் வேலை செய்தாலும் எங்கள் மேல் ஒரு தனி அன்பு. அவர்களின் செலவுகளை என் அம்மாதான் பார்த்துக்கொள்வார்.

செல்வியின் மகள் சாந்தி 8ஆம் வகுப்பு படிக்கிறாள். நேற்று வயதுக்கு வந்துவிட்டாளாம். அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டுமென்பது செல்வியின் ஆசை. அதற்கு அம்மாவிடம் பணம் கேட்டிருக்கிறார். என் அம்மாவிற்கு தன்னோட பெண் அபிராமிக்கு இது மாதிரி மஞ்சள் நீராட்டு விழா நடத்தி பார்க்க முடியவில்லை என்று ஒரு ஏக்கம் இருந்ததாம். அதனால் எனக்கும் சாந்திக்கும் சேர்த்து ஒரே மஞ்சள் நீராட்டு விழாவாக கொண்டாட ஒரு யோசனை தோன்றியது. அதனால் இந்த ரகசிய ஏற்பாட்டினை செய்தார்.

எனக்கு காரணம் தெரிந்ததால், என்ன சொல்வது என்று தெரியாமல் எனக்கு அழுகை வந்து விட்டது. என் அம்மாவும் பூர்ணிமா அம்மாவும் என் அழுகையை நிப்பாட்ட முயன்றனர்.

"நல்ல நாள் அதுவுமா இப்படி அழுகாதடி. இன்னக்கி உனக்கு ஒரு முக்கியமான நாள். சந்தோசமா இரு" என்றார் என் அம்மா.

"இதுக்கே இப்படி அழுதா எப்படி.கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போகும் பொது எப்படி அழுகப்போறியோ" என்று பூர்ணிமாவின் அம்மா கிண்டல் அடித்தார்.

வேலைக்கார அக்காவோ , "அப்போ வீட்டோட மாப்பிளை பார்த்து கட்டி வைக்கவேண்டியதுதான்" என்று அவர் பங்குக்கு பேசினார்.

எனக்கு வெட்கம் வந்து என் அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டேன்.

"உன் புருஷனை இப்படி கட்டிப்பிடு.. இப்போ உங்கம்மாவை விடு" என்று செல்வி அக்கா என்னை அழைத்துக்கொண்டு நாற்காலியில் அமரச் செய்தார்.

எனக்கு வெட்கம் கலந்த சந்தோசம் ஆட்கொண்டது. அந்தப் பெண் சாந்திக்கும் அப்படித் தான் இருக்கும் போல். நாங்கள் இருவரும் தலை தாழ்த்தி வெட்கத்துடன் அமர்ந்திருந்தோம்.


பின்பு எனக்கு என் அம்மாவும், சாந்திக்கு செல்வி அக்காவும் உடம்பு முழுவதும் மஞ்சள் தேய்த்தனர். பூர்ணிமாவும் கீதாவும் அம்மாவோடு சேர்ந்து கொண்டு என் கை மற்றும் கால்களில் மஞ்சள் தேய்த்தனர். எனக்கு வெட்கம் மட்டுமே வந்தாதால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.


சிறிது நேரம் கழித்து, எங்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி குளிப்படினார்கள். கீதா அவள் மட்டும் தனியாக எனக்கு மஞ்சள் நீராட்ட வேண்டும் என்று ஆசை பட்டதால் அவள் மட்டும் மீண்டும் ஒரு முறை தனியாக எனக்கு மஞ்சள் நீராட்டினாள்.


"தங்கச்சிக்கு அப்புறம் அக்கா வயசுக்கு வருவது இந்திய தொலைக்காட்சியில் இது தான் முதல் முறை, அதனால் நான் இதை மறக்க மாட்டேன்" என்று நகைச்சுவையுடன் பேசினாள். அம்மா சொன்னதால் என்னை அழைத்துக் கொண்டு கீதா அவள் அறைக்கு சென்றாள்.


"அம்மா உன்னை டிரஸ் மாத்திட்டு திரும்பி வர சொன்னாங்க. புது டிரஸ் எடுத்து வைத்திருக்காங்க" என்றாள் கீதா.

"அது எல்லாம் இருக்கட்டும். இதை எல்லாம் ஏன் இப்படி ரகசியமா வச்சீங்க? ஏன் முன்னாடி சொல்லவில்லை?"

"எனக்கே தெரியாதுடி. எல்லாம் அவுங்க முடிவு பண்ணி இரகசியமா பண்ணிட்டாங்க" என்று சொல்லிகொண்டிருந்த போது பூர்ணிமா உள்ளே வந்தாள்.

"என்னடி, சந்தோசமா உனக்கு? நான் தான் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னேன். அதன் அம்மா உங்ககிட்ட சொல்லவில்லை" காரணம் சொன்னாள் பூர்ணிமா.

"இப்போ உங்க அம்மவுக்கும் செல்வி அக்காவுக்கும் தெரிஞ்சி போச்சி என்னைப் பத்தி. என்ன நினைப்பாங்க என்னைப் பத்தி?"

"ஏன் இதுக்கு போய் கவலைப்படுற? எப்படியும் நீ ஒரு பெண்ணாய் வெளியே வரணும். நாலு பேரு பாப்பாங்க. அதனால நீ அதைப்பத்தி எல்லாம் கவலைப் படக்கூடாது. இப்போ அவுங்களுக்கு தெரியும் என்பதால் இன்னும் நீ சுதந்திரமா இருக்கலாம். நாங்க நிறைய பேரு உனக்கு சப்போர்ட் இப்போ" என்று அவள் சொன்னது உண்மை என்று தோன்றியது.

அப்புறம் நான் உடை அணிய ஆரம்பித்தேன். புதிதாய் வாங்கிய லேஸ் வைத்த புஷ்-அப் பிரா அணிந்த பின் சிலிகான் பிரா பேட் உள்ளே வைத்தேன். பின்பு அதன் கூட எடுத்த பேன்ட்டி அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளி வந்து இருவரிடமும் காமித்தேன். அப்போது அம்மா உள்ளே வந்தார்கள்.


முதன்முறையாக அம்மா என்னை உள்ளாடையில் பார்கிறார்கள். எனக்கு அது ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது. அம்மாவுக்கும் அப்படித்தான் போல். என்னை இதுவரை ஒரு மகனாய் பார்த்து விட்டு , இப்போது ஒரு பெண்ணாய் அதுவும் பெண்கள் அணியும் உள்ளாடையில் பார்கிறார். அவர் அழுது விட்டார்.

பின்பு அவரே சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"நான் இப்படி உன்னை பிரா போட்டுக்கிட்டு, உண்மையான ஒரு பொண்ணு  வெட்கபடுகிற மாதிரி பார்ப்பேன்னு கனவிலும் நினைக்க வில்லை. நீ வெட்க படுறதை பாக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவ்ளோ நாள் எங்கடி போச்சி உனக்குள்ள இருந்த இந்த பெண்மை? இப்படி உன்னை இப்போது பார்த்து விட்டதால் உன்னை ஒரு பெண்ணாக தான் என் மனசு பார்க்கும் இனிமேல்" என்று சொல்லியபடி ஆடைகளை எடுத்துக்கொடுத்தார்.

அந்த பையில் பச்சை-நீளம் கலந்த புடவை, ரவிக்கை, கருப்பு உள்பாவாடை இருந்தது. அம்மா மற்றும் பூர்ணிமா உதவியுடன் ரவிக்கை அணிந்து கொண்டேன். அணிந்திருந்த பிராவிற்கு மேல் ரவிக்கை வைத்து கொஞ்சம் இழுத்து ரவிக்கையின் அந்த 5 ஹூக் மாட்டும் போது ஒரு பரவசத்தை உணர்ந்தேன். பின் உள்பாவாடை எடுத்து இடிப்பில் கட்டிக்கொண்டேன். அம்மா எனக்கு புடவை கட்டிவிட்டார்.

கையில் வளையல்கள், கழுத்தில் 1 பெரிய நெக்லஸ், 1 சிறிய நெக்லஸ், காலில் வெள்ளி கொலுசு அணிந்தேன். நெக்லஸ் அணிய கீதா உதவினாள். பின்பு நான் வாங்கிய ஜிமிக்கி அணியச் சொன்னார் அம்மா. ஒரு காதில் நான் மாட்டினேன். மற்றொரு காதில் கீதா மாட்டிவிட்டாள். தலையில் விக் அணிந்த பின், அதை அழகாய் வாரிவிட்டு, மல்லிகை பூ வைத்து விட்டார். முதல் முதலாய் இப்போது தான் புடவை அணிகிறேன்.

நடக்கும் போது காலில் இருந்த கொலுசு ஏற்படுத்தும் சத்தமும், தலை அசையும் போது, காதில் இருந்த ஜிமிக்கி என் மேல் உராயும் உணர்ச்சியும் என்னை ஏதோதோ பண்ணியது. பெண்மையின் சுகங்களை அப்போது தான் முழுவதுமாய் உணர்ந்தேன்.

"அபிராமி, உனக்கு இந்த புடவை புடிச்சிருக்கா?"

"ரொம்ப நல்ல இருக்கு அம்மா. எல்லாம் புதுசா இருக்கே.. எப்போ எடுத்தீங்க?"

"அதுவா, அன்னைக்கு நான் உங்களை கடையில் தனியா விட்டுட்டு போனேன்ல. நீங்க கூட கேட்டீங்க.. நான் அப்புறம் சொல்றேன் என்று சொன்னேன்.. உனக்கு இந்த புடவை வாங்கத்தான் வேற கடைக்கு போனேன். அப்புறம் டைலர் கிட்ட கீதா ப்ளௌஸ் அளவு கொடுத்து உனக்கு இந்த ப்ளௌஸ் வாங்கினேன்." என்று சொல்லி என்னை மறுபடியும் தோட்டத்து பக்கம் கூட்டிச் சென்றார்.


அங்கே சாந்தியும் புடவை மற்றும் நகை அணிந்து, அமர்ந்து இருந்தாள். நான் அவளருகில் அமர்ந்தேன். பின்பு அங்கிருந்த அணைத்து பெண்களும் எனக்கும் சாந்திக்கும் நெத்தியில் கும்குமம் வைத்தனர். நான் தலை குனிந்து பொறுமையாய் இருந்தேன்.

என் வாழ்வின் மிக முக்கியமான நாள் இது. இன்று தான் நான் உண்மையாய் வயதுக்கு வந்ததாய் அம்மா சொன்னார். இதோ எல்லாரும் சென்று விட்டார்கள். நான், அம்மா மற்றும் கீதா மட்டும் இருக்கிறோம் எங்கள் வீட்டில். முதன் முதலாய் அணிந்த இந்த புடவையை இன்று முழுவதும் கலட்டப் போவதில்லை.

உங்களுக்கும் புடவை பிடிக்கும்தானே?